Daily Catholic Reflections Catholic Leaf Visit Now!

25 Bible verses in Tamil with ‍Images - Free Download

இறைவார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தது. உலகத்திலேயே ஞானம் நிறைந்த நூல் எதுவென்று பார்க்கும்போது பைபிள்தான் நம் கவனத்திற்கு வருகிறது.

Bible verses in Tamil with Images

25 Bible verses in Tamil with ‍Images - Free Download

இறைவார்த்தை கொண்ட படம்

இறைவார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தது. உலகத்திலேயே ஞானம் நிறைந்த நூல் எதுவென்று பார்க்கும்போது பைபிள்தான் நம் கவனத்திற்கு வருகிறது. பைபிளில் இருக்கும் ஞானம் எல்லா காலகட்டத்துக்கும் பொருத்தமானது. எல்லா விதமான அறிவியல் உள்ளடக்கும் பைபிள் நம்மை இறைவனோடு இணைக்கிறது. பைபிள் நமக்கு பல வழிகளை காட்டுகிறது. நான் என்ன நிலையில் இருந்தாலும், நமது பலவித கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஞானத்தை கொண்டுள்ள பைபிள் நான் சோர்ந்த போதும் நமக்கு Motivating சக்தி படைத்தது.

இதற்காகவே உங்களுக்காக 25 தேர்ந்தெடுக்கப்பட்ட Bible Verses உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர் அனைவருக்காகவும் ஊக்கமூட்டும் இறைவார்த்தை. இதை Free download செய்து உங்கள் குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Bible verses in Tamil with images

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன்.


 யோசுவா 1:9

Bible verses in Tamil with images

எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்; அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன்.

  2 குறிப்பேடு 7:14

முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.

 நீதிமொழிகள் 3:5


நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.

  நீதிமொழிகள் 3:6

துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.

  திருப்பாடல்கள் 34:4

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

  திருப்பாடல்கள் 34:5

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.

  திருப்பாடல்கள் 34:8


‘என் அடி சறுக்குகின்றது’ என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.

  திருப்பாடல்கள் 94:18

என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.

  திருப்பாடல்கள் 94:19

அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்.

  எசாயா 41:10

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து,“அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே.

  எசாயா 41:13

எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.

  மத்தேயு 6:31


பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.

  மத்தேயு 6:32

அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்* நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

  மத்தேயு 6:33

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

  மத்தேயு 6:34

என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்

  யோவான் 16:33

கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

  உரோமையர் 8:28

எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.

  உரோமையர் 15:13

கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.

  பிலிப்பியர் 2:3

நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

  பிலிப்பியர் 2:4

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.

  பிலிப்பியர் 4:6

அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

  பிலிப்பியர் 4:7

கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.

  1 பேதுரு 5:6

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.

  1 பேதுரு 5:7

அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன” என்றது.

  திருவெளிப்பாடு 21:4

Hope you liked these images with bible verses. Which Bible verse inspired you today?

About the Author

Hello this is Sam, I am Blogger.

Post a Comment

நன்றி
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.