kalvariye kalvariye kadavulin magan nilai
The Most Powerful Way of the Cross Song Lyrics You'll Ever Hear. kalvariye kalvariye kadavulin magan nilai in tamil is an wonderful song which is very emotional and very much fitting for the way of the cross procession. Here is this post I have provided with you the full kalvariye kalvariye kadavulin magan nilai lyrics of the song in Pdf for free download and mp3 of the song to listen and download for free.
1.ஆளுனன் பிலாத்துவும் அச்சத்தினால்
ஆண்டவர் இயேசுவை தீர்ப்பு இட்டார்
வானமும் வையமும் படைத்தவரோ
மானிடன் தீர்ப்புக்கு தனை கொடுத்தார்
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
காலங்கள் எல்லாம் கடந்த இவர்
கைகட்டி நிற்பதை பார்த்தாயா -2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
2. ஆண்டவர் இயேசுவும் அன்புடனே
ஏற்கிறார் பாவத்தின் சிலுவையினை
தியாகமும் வீரமும் கொண்டதனால்
தோள்களில் சிலுவையை தாங்குகிறார்
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
தியாகத்தின் தலைவன் தோள்களிலே
பாவத்தின் சுமையினை பார்த்தாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
3. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு
வாழ்வென்னும் பாதையில் தடைக்கல்லோ
வானக வீதியை சமைத்தவரோ
பூமியின் வீதியில் வீழ்ந்து விட்டார்
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
வாழ்வினுக்கெல்லாம் தலைவன் இவர்
வீழ்ந்திடும் காட்சியை கண்டாயா -2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
4. மாமரி மைந்தனை சந்திக்கிறார்
மாசில்லா மகனும் சந்திக்கிறார்
தாய்மையும் சேய்மையும் கலக்கிறது
மானிட விடுதலை பிறக்கிறது
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
மாமரியாளின் இதயத்திலே
பாய்ந்திடும் வாலினை பார்த்தாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
5. தேவனின் பணியில் பங்கெடுக்க
மானிடன் ஒருவன் வந்து விட்டார்
உழைக்கின்ற சீமோன் உவப்புடனே
உலகத்தின் மீட்புக்கு தோள்கொடுத்தார்
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
மானிட மீட்பின் நாயகனில்
மனிதனின் தோழமை பார்த்தாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
6. அழகுக்கு ஊற்றாம் இறைமகனின்
அன்பினில் தோய்ந்திட்ட முகமிதுவோ
கலையினை இழந்து காட்சிதரும்
கடவுளின் முகமும் இதுதானோ
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
கறைப்பட்ட முகத்தை துடைக்கவரும்
வெரோணிக்கா வீரத்தைக் கண்டாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
7. தனிமையும் சோர்வும் சேர்ந்துகொள்ள
தர்மத்தின் தலைவன் சாய்ந்துவிட்டார்
தளர்ச்சியில் வாடிடும் மனித்தினை
தாங்கிட வந்தவர் வீழ்ந்துவிட்டார்.
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
வேருடன் சால்ந்திட்ட மரம்போல
திருமகன் வீழ்ந்ததைப் பார்த்தாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
8. எதிர்கொண்ட எருசலேம் மகளிருக்கு
இறை மகன் ஆறுதல் பகருகின்றார்
அழுகின்ற மகளிரின் கண்ணீரை
அன்புடன் ஆண்டவர் துடைக்கின்றார்
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
இன்னல்கள் தாங்கிடும் வேளையிலும்
இரங்கிடும் இதயத்தைக் கண்டாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
9. பலமெல்லாம் குன்றிய வேளையிலே
பயணத்தின் முடிவு வருகின்றது
உடலினில் வோர்வுகள் ஓங்கிடவே
ஓடுங்கியே வீழ்கிறார் தரையினிலே
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
தூயவராக இயேசு தெய்வம்
தூசியில் கிடப்பதைக் கண்டாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
10. ஆடைகள் களையப்படுகின்றன
ஆண்டவர் வலியினில் துடிக்கின்றார்.
மானத்தை இழந்த மனிதர்களின்
மாண்பினைக் காக்கவோ இந்த நிலை
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
ஆடைகள் களைந்த செம்மறியால்
ஆண்டவர் நிற்பதை கண்டாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
11. கால்களில் கைகளில் ஆணிகளால்
அறைந்திட கரங்களை விரிக்கின்றார்
வானுக்கும் மண்ணுக்கும் இடையினிலே
வரங்களை தருபவர் துடிக்கின்றார்
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
ஆணிகளாலே அறையப்பட்ட
அன்பரின் நிலையினை கண்டாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
12. அளவினைக் கடந்த அன்பு இது
உலகினை வென்ற உண்மையிது
சிறுவையின் மரத்தினில் பிணைக்கப்பட்டு
உயிரினைத் தந்த சிகரமிது
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
சிகரத்தின் உச்சியில் தலைவன் தந்த
செந்நிற வேள்விறை கண்டாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
13. உலகுக்கு உயிர்தந்த இறைமகனின்
உயிரற்ற உடலிங்கு தாய்மடியில்
மரியவள் இதயமும் நொறுங்கியது.
மைந்தனின் முடிவினைக் கண்டதினால்
கல்வாரியே கல்வாரியே
கடவுளின் மகன் நிலை கண்டாயா
அளவற்ற அன்பினால் தன்னை தந்த
அன்னையின் துயரத்தைக் கண்டாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
14. வாழ்விலும் சாவிலும் இடமில்லை
வானமும் வையமும் படைத்தவர்க்கு
வேதனை இதனிலும் உண்டாமோ
சோகத்தின் எல்லையும் இதுதானோ!
கல்வாரியே! கல்வாரியே!
கடவுளின் மகன் நிலை கண்டாயா?
மனிதரை உயர்த்திட்ட இறைமகனோ
மண்ணுக்குள் மறைவதை கண்டாயா - 2
கல்வாரியே கல்வாரியே
கலைந்திடும் உந்தன் மௌனம்
விரைவினில் என் உயிரினில்
கலந்தது தெய்வீகம்
கரையுது என் பலவீனம்
The Way of the Cross Song in tamil is a hymn that has been used in various liturgical services and prayer groups throughout the years. The song is also used in a number of Catholic devotionals and books. The song is written in a simple and easy to understand style and can be sung by anyone.
This song is based on the Gospel story of Jesus and his journey to the cross. The song tells the story of Jesus’ suffering and death on the cross. The song is a prayerful song that asks the Holy Spirit to help us understand the cross and to learn how to follow Jesus.
The song is a great way to help us remember the Jesus suffering on earth. Thank You guys see you next post. Stay tuned of the latest updates.